அண்மைய செய்திகள்

recent
-

வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல்; இளைஞர் ஒருவர் படுகாயம் !

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அன்புவெளிபுரம் பிரதேசத்தில் நேற்று நண்பகல் நால்வர் மேற்கொண்ட வாள் வெட்டினால் 34 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தமது வீட்டு வாசலில் நின்றிருந்த இளைஞன் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து தாக்குதலுக்கு உள்ளானவரின் மாமா நியாயம் கேட்ட நிலையில் தாக்குதல் மேற்கொண்ட இருவர் மேலும் இருவருடன் வீடுபுகுந்து வாள் மற்றும் பொல்லுகளால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

 தாக்குதலில் படுகாயமடைந்த நபர் திருகோணமலை பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும் குறித்த தாக்குதலினால் 39 வயது மற்றும் 65 வயது பெண்கள் இருவர் உட்பட ஐந்து சிறுவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர். தாக்குதல் நடத்திய நால்வரை உப்புவெளி பொலிஸார் தேடி வருவதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல்; இளைஞர் ஒருவர் படுகாயம் ! Reviewed by Author on November 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.