7 பிள்ளைகளின் தந்தை குளத்தில் விழுந்து உயிரிழப்பு!
உறுகாமம் புதூர் கிராமத்தில் வசிக்கும் அப்துல் காதர் அப்துல் ஸலாம் (வயது 58) எனும் 7 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது வழமைபோன்று இவர் உறுகாமம் புதூர் குளத்தில் இரவு நேர மீன்பிடிக்காக புதன்கிழமை இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து குளத்திற்குச் சென்றுள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் இவர் குளத்தில் விழுந்து உயிரிழந்து கிடப்பது பற்றி சக மீனவர்கள் கண்டு சடலத்தை மீட்டெடுத்துள்ளனர்.
இது பற்றி கரடியனாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சடலம் உடற் கூறாய்வின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
7 பிள்ளைகளின் தந்தை குளத்தில் விழுந்து உயிரிழப்பு!
Reviewed by Author
on
November 19, 2020
Rating:
Reviewed by Author
on
November 19, 2020
Rating:


No comments:
Post a Comment