பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் தந்தை திடீர் மரணம்!
அதைத் தொடர்ந்து லொஸ்லியா விளம்பரப் படங்கள், திரைப்படங்கள் என தற்போது நடித்து வருகிறார்.லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் தனது குடும்பத்தைப் பிரிந்து, கனடா நாட்டில் 10 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருவதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல முறை லொஸ்லியா கூறியிருந்திருக்கிறார்.
இந்நிலையில் கனடாவில் இருந்த மரியநேசன், நேற்று(16) பின்னிரவு மாரடைப்பின் காரணமாக திடீர் மரணமடைந்ததாக இணையத்தில் செய்திகள் பரவின. சிறிது நேரத்தில் லொஸ்லியா தனது டுவிட்டர் சமூகவலைத்தள பக்கத்தில் தனது தந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்து மனமுடைந்துவிட்டதாக எமோஜியில் குறிப்பிட்டுப் பகிர்ந்தார். இதைத் தொடர்ந்து லொஸ்லியாவின் எண்ணற்ற திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் கலந்து கொண்ட சக போட்டியாளர் இயக்குநர் சேரன் தனது அப்பாவைப் போல இருப்பதால், லொஸ்லியா அவரை அப்பா என்றே அழைத்து வந்தார். மரியநேசனின் மறைவுக்கு சேரன் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“லொஸ்லியா.. தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படித் தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று சேரன் பகிர்ந்துள்ளார்.
மரியநேசனின் உடல் கனடாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. சென்னையில் இருக்கும் லொஸ்லியா தற்போது இலங்கைக்கு விரைந்துள்ளார்.
பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் தந்தை திடீர் மரணம்!
Reviewed by Author
on
November 16, 2020
Rating:

No comments:
Post a Comment