எப்படித் தாங்குவாய் மகளே…. லொஸ்லியாவின் தந்தை மரியநேசனின் மரணம் குறித்து சேரன் உருக்கம்
லொஸ்லியாவும், சேரனும் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள். அப்போது சேரனைப் பார்க்கும்போது தனது அப்பாவை பார்ப்பது போல் இருப்பதாகக் கூறிய லாஸ்லியா, அவர் மீது அதிக பாசம் கொண்டிருந்தார். சேரனும் அவரை தன் மகள் போல கவனித்து வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி அறிந்த சேரன், டுவிட்டரில் ”லொஸ்லியா… தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாகத் தெரியும். இந்தச் செய்தி என்னையே உலுக்குகிறது.
எப்படித் தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதெனத் தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
எப்படித் தாங்குவாய் மகளே…. லொஸ்லியாவின் தந்தை மரியநேசனின் மரணம் குறித்து சேரன் உருக்கம்
Reviewed by Author
on
November 16, 2020
Rating:

No comments:
Post a Comment