பதுக்கி வைக்கப்பட்ட பருப்பு உட்பட காலாவதியான உணவுப்பொருட்கள்
உதவி ஆணையாளர் அலுவலகத்துக்கு, நுகர்வோர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அதிகாரிகளும், தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் செயலாளரும் இன்று மேற்படி கட்டடம் அமைந்துள்ள பகுதிக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டனர்.
எனினும், குறித்த கட்டடம் கூட்டுறவால் மூடப்பட்டு சாவியும் எடுத்துச் செல்லப்பட்டிருந்த நிலையிலேயே ´சீல்´ வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் செயலாளர் பண்டார,
" காலாவதியான பொருட்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய அவை களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தை பரிசோதிக்க வந்தோம். எனினும் கட்டடம் மூடப்பட்டிருந்ததால் அதனை சீல் வைத்தோம். கொரோனா காலத்தில் மக்களுக்கு இங்கிருந்தே பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. உரிய விசாரணைகள் இடம்பெறும்." - என்றார்.
பதுக்கி வைக்கப்பட்ட பருப்பு உட்பட காலாவதியான உணவுப்பொருட்கள்
Reviewed by Author
on
November 06, 2020
Rating:

No comments:
Post a Comment