அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் விவசாயிகளின் வயல்களில் நிறைந்து காணப்படும் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டும் விவசாயிகள்.

வடக்கு கிழக்கை மாகாணங்களை கடந்த வாரம் அச்சுறுத்திய 'புரேவி' புயல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் பெரும்போக பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டது. -இதனால் விவசாயிகள் அழிவை சந்திக்கும் நிலைக்கு தள்ளக்கட்டிருந்தனர். 

குறிப்பாக பிரதான வாய்க்கால்களில் தொடர்ச்சியாக நீர் வழிந்து செல்வதாலும் இடையிடையே மழை பெய்து கொண்டிருப்பதாலும் வயல்களில் தேங்கியிருக்கும் நீர் வெளியேற முடியாத நிலையில் தேங்கியுள்ள நிலையில் காணப்பட்டதோடு,வாய்க்கால்களும் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது. வயல் நிலங்களில் காணப்படும் நீரை வெளியேற்றும் வகையில் வாய்க்கால் துப்பரவு செய்யப்பட்டு, இயந்திரங்கள் மூலம் நீரை இரைத்து வெளியேற்றி பயிர்களை காப்பாற்றும் முயற்சியில் மன்னார் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். -இதனால் எஞ்சியுள்ள விவசாய செய்கையை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.





மன்னாரில் விவசாயிகளின் வயல்களில் நிறைந்து காணப்படும் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டும் விவசாயிகள். Reviewed by Author on December 15, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.