மொரோக்கோ படகு விபத்தில் சிக்கிய 2 இலங்கை இளைஞர்களில் ஒருவர் பலி
தாம் ஸ்பெயினுக்கு செல்லவுள்ளதாக இறுதியாக அவர்கள் குடும்பத்தாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
எவ்வாறாயினும், அவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளானதாக அதிலிருந்து தப்பிய ஒருவர் வவுனியாவை சேர்ந்த இளைஞர்களின் உறவினர்களுக்கு அறிவித்துள்ளார்.
வவுனியா – குருமன்காடு பகுதியை சேர்ந்த பிரசன்னா சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வவுனியா – நொச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள வௌிவிவகார அமைச்சு அலுவலகத்திற்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் விபத்தில் சிக்கிய இளைஞர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
மொரோக்கோ படகு விபத்தில் சிக்கிய 2 இலங்கை இளைஞர்களில் ஒருவர் பலி
Reviewed by Author
on
December 14, 2020
Rating:

No comments:
Post a Comment