அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் பகிஷ்கரிப்பில்
1. தாதிய உத்தியோகத்தர்களின் குடும்பத்தினருக்கும் ஏனைய சுகாதாரத் துறையினரின் குடும்பத்தினருக்கும் கோவிட் தடுப்பூசி ஏற்றல்.
2. அனைத்து தாதியருக்கும் ரூபா 5000 ரூபா இடர் கொடுப்பனவு வழங்குதல்.
3. புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட 4000 தாதிய உத்தியோகத்தர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றல்.
4. கர்ப்பிணி தாதிய உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்கல்.
5. கொவிட் பரிசோதனை பிரிவில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு போதிய வழங்களை வழங்குதல்.
6. பயணத்தடை காலத்தில் தாதிய உத்தியோகத்தர்களுக்கு கடமைக்கு வருகை தருவதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
7. கொரோனா சிகிச்சை மையங்களிலும் ஏனைய சுகாதாரசார் நிறுவனங்களிலும் கடைமை புரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கு N 95 முகக் கவசம் மற்றும் உரிய பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட வேண்டும்.
எனவே எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் குடும்பத்தினருக்கான தடுப்பூசி ஏற்றலுக்கு மட்டுமே இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய கோரிக்கைகளான இடர்கால கொடுப்பனவு, கர்ப்பிணி தாதியருக்கான விடுமுறை தொடர்பான சுற்று நிருபம் வெளியிடப்பட்டும், அதனை நடைமுறைப்படுத்தாமை போன்ற ஏனைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமையால் 25 ஆம் திகதி மாலை முதல் வைத்தியசாலைகளிலும் ஏனைய சுகாதார சார் நிறுவனங்களிலும் தாதியர்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த பி.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனைச் செயற்பாடுகளிலிருந்து தாதிய உத்தியோகத்தர்கள் முற்றாக விலகியிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் அறியத்தருகின்றது.
அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் பகிஷ்கரிப்பில்
Reviewed by Author
on
May 28, 2021
Rating:
Reviewed by Author
on
May 28, 2021
Rating:


No comments:
Post a Comment