அண்மைய செய்திகள்

recent
-

எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல் ஒத்திவைப்பு

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக, நேற்றிரவு (17) நடைபெறவிருந்த அமைச்சரவை உப குழுவின் கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் அமைச்சரவை உப குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

 சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு, LAUGH மற்றும் LITRO நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தன. அது குறித்து ஆராய்ந்து தீர்மானமொன்றை எடுப்பதற்காக, அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல் ஒத்திவைப்பு Reviewed by Author on June 18, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.