"பசி இல்லா மன்னார்" அமைப்பின் ஊடாக ஒரு தொகுதி நிவாரண பொருட்கள் கையளிப்பு
மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் டாக்டர் அரசகோன் கிளினிகின் நிதி அணுசரணையில் பசி இல்லா மன்னார் அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் சதீஸ் ஏற்பாட்டில் வைத்தியர் அரசகோன் கிளினிக் னுடைய நிறுவனத்தலைவர் குறித்த நிவாரண பொருட்களை தலைமன்னார் பியர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைத்தார்
அண்மையில் கொரோனா பரவல் காரணமாக முழுதாக முடக்கப்பட்ட தலைமன்னார் பகுதியை சேர்ந்த குறித்த தெரிவு செய்யப்பட்ட 25 குடும்பங்களுக்கு சுமார் 5,000 ரூபா பெறுமதியான அரிசி,சீனி,மா,பருப்பு,கடலை உட்பட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதிகள் மேற்படி வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
"பசி இல்லா மன்னார்" அமைப்பின் ஊடாக ஒரு தொகுதி நிவாரண பொருட்கள் கையளிப்பு
Reviewed by Author
on
July 24, 2021
Rating:
Reviewed by Author
on
July 24, 2021
Rating:



No comments:
Post a Comment