அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் “மெசிடோ” நிறுவனத்தினால் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கான சுகாதார பொருட்கள் கையளிப்பு

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் மன்னார் தாராபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கான ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் மன்னார் மாவட்ட செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக தாராபுரம் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகைச்சை பெற்றுவரும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சுகாதார பொருட்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைவாக மெசிடோ நிறுவனத்தின் மன்னார் மாவட்ட குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் கையளிக்கப்பட்டுள்ளது

 முககவசம்,பற்பசை,கிருமிநீக்கி,பாதனி,சவர்காரம், சலவைதூள்,ஆடை, உட்பட்ட பதினொரு அத்தியாவசிய சுகாதார பொருட்கள் அடங்கிய 100 பொதிகள் மேற்படி கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு என கையளிக்கப்பட்டது அதே நேரம் கொரோனா தனிமைப்படுத்தலில் உள்ள 30 குடும்பங்களுக்கான அத்தியாவசிய நிவாரண பொருட்களும் மெசிடோ நிறுவனத்தினால் மன்னார் பிரதேச செயலகத்துடன் இணைந்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதது
                  













மன்னாரில் “மெசிடோ” நிறுவனத்தினால் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கான சுகாதார பொருட்கள் கையளிப்பு Reviewed by Author on August 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.