அண்மைய செய்திகள்

recent
-

வீரகெட்டிய பகுதியில் துப்பாக்கிச்சூடு – 14 வயது சிறுவன் உயிரிழப்பு

வீரகெட்டிய – வெகந்தவெல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். நேற்றிரவு குடும்பத் தகராறின்போது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான சிறுவன் பலத்த காயங்களுடன் வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 இதனையடுத்து, தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று (திங்கட்கிழமை) காலை உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் துப்பாச்சூடு நடத்திய சந்தேகநபர் அந்த பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வீரகெட்டிய பகுதியில் துப்பாக்கிச்சூடு – 14 வயது சிறுவன் உயிரிழப்பு Reviewed by Author on September 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.