அண்மைய செய்திகள்

recent
-

ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்

நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளையும் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனை தெரிவித்துள்ளார். இதற்கான அனுமதியினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதன் முதற்கட்டத்தின் கீழ் கடந்த 21 ஆம் திகதி 200 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. 

 அதன்படி, இரண்டாம் கட்டத்தின் கீழ் 200 க்கும் அதிக மாணவர்களை கொண்ட பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள், கத்தோலிக்க பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல் Reviewed by Author on October 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.