அண்மைய செய்திகள்

recent
-

முல்லேரியாவில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி; ஒருவர் காயம்

கொட்டிகாவத்த, முல்லேரியா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை 6.30 முதல் 07.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் 45 வயதுடையவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு , நுகேகொடை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் முல்லேரியா பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



முல்லேரியாவில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி; ஒருவர் காயம் Reviewed by Author on October 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.