அண்மைய செய்திகள்

recent
-

பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசின் கீழ் கொண்டுவர நடவடிக்கை

பெருந்தோட்டங்களில் காணப்படும் வைத்தியசாலைகளை அரசின் கீழ் பொறுப்பேற்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பெருந்தோட்ட மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 450 வைத்தியசாலைகளில் முதல் கட்டமாக 59 வைத்தியசாலைகளை பொறுப்பேற்க சுகாதார அமைச்சரினால் சமர்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 பெருந்தோட்டங்களில் காணப்படும் வைத்தியசாலைகளை அரசிற்கு கீழ் பொறுப்பேற்பது தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, பெருந்தோட்டங்களில் காணப்படும் மருந்தகங்கள் மற்றும் வைத்தியசாலைகளை அரசிற்கு பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசின் கீழ் கொண்டுவர நடவடிக்கை Reviewed by Author on January 25, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.