அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் குளிக்கச்சென்று காணாமற்போன 2 மாணவர்களின் சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பு – கிரான், நாகவத்தை கடலில் குளிக்கச்சென்று காணாமற்போன மாணவர்கள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகவத்தை கடற்பகுதியில் நேற்று முன் தினம்  (14) பிற்பகல் பாடசாலை மாணவர்கள் 7 பேர் நீராடச் சென்றுள்ளனர்.

 இதன்போது, மூவர் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டதுடன், ஒருவர் காப்பாற்றப்பட்டிருந்தார். நீரில் மூழ்கி காணாமற்போயிருந்த ஏனைய இருவரும் இன்று சடலமாக மீட்கப்பட்டனர். இன்று பிற்பகல் வேளையில் ஒரு மாணவரின் சடலம் மீட்கப்பட்டதுடன், மற்றைய மாணவரின் சடலம் இரவு 7 மணியளவில் மீட்கப்பட்டது.

மட்டக்களப்பில் குளிக்கச்சென்று காணாமற்போன 2 மாணவர்களின் சடலங்கள் மீட்பு Reviewed by Author on January 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.