அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற சூரிய பொங்கல் மற்றும் உழவர் கௌரவிப்பு நிகழ்வு.

மன்னார் மாவட்ட செயலக அலுவலர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சூரிய பொங்கல் மற்றும் உழவர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று புதன்கிழமை (19) காலை 9 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டச் செயலகத்தின் அலுவலர் நலன்புரி சங்கத்தின் தலைவரும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளருமான கே. திலீபன் தலைமையில்; நடைபெற்றது. 

 நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் , பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் மாவட்ட செயலகத்தின் உதவி மாவட்ட செயலாளர்களும் , முப்படை அதிகாரிகளும், மாவட்ட செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலக பிரிவுகளிலும் இயற்கை முறையில் விவசாய செய்கையினை மேற்கொண்டு வரும் 5 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு மதிப்பளிக்க பட்டனர். மேலும் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்திற்கான உதவித்தொகையும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
                 
               
                 









மன்னார் மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற சூரிய பொங்கல் மற்றும் உழவர் கௌரவிப்பு நிகழ்வு. Reviewed by Author on January 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.