அண்மைய செய்திகள்

recent
-

இனியும் NATO-வில் சேர விரும்பவில்லை: உக்ரைன் ஜனாதிபதி தெரிவிப்பு

இனியும் NATO நாடுகள் அமைப்பில் சேர விரும்பவில்லை என உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க NATO நாடுகளில் உக்ரைன் இணைய இருப்பது ஒரு காரணம் என கூறப்பட்டது. போர் தொடங்கிய பின்னர் NATO நாடுகள் உக்ரைனுக்கு பெரிய அளவில் உதவிகள் எதுவும் செய்யவில்லை. இதனை உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy வெளிப்படையாக தெரிவித்துள்ளார். போர் தொடங்கி 2 வாரங்களான நிலையில், NATO நாடுகள் அமைப்பில் சேர வேண்டும் என்று உக்ரைன் விரும்பியது. ஆனால் NATO, உக்ரைனை ஏற்க விரும்பவில்லை என்பதை இப்போது தான் புரிந்துகொண்டோம்.

 எனவே, NATO அமைப்பில் எங்களை உறுப்பினராக சேர்த்து கொள்ளுங்கள் என்ற எங்களின் கோரிக்கைக்கு இனியும் அழுத்தம் கொடுக்கப் போவதில்லை. இனி NATO நாடுகள் அமைப்பில் சேர விரும்பவில்லை. மண்டியிட்டு எதையாவது தானமாக பெறும் நாட்டின் ஜனாதிபதியாக இருக்க நான் விரும்பவில்லை. ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனில் உள்ள 2 பிரிவினைவாத குழுக்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கி உள்ளார். அந்த குழுக்கள் தொடர்ந்து எங்களுடன் போரிட்டு வருகிறார்கள். அங்கு வசிக்கும் மக்கள் உக்ரைனின் பகுதியாக வாழவே ஆசைப்படுகிறார்கள். ரஷ்யாவை தவிர வேறுயாரும் இக்குழுக்களை அங்கீகரிக்கவில்லை. அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு குறித்த உத்தரவாதம் வேண்டும். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாராக உள்ளது. ரஷ்ய அதிபர் புதின் இப்பிரச்சினைகள் குறித்து திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். என உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இனியும் NATO-வில் சேர விரும்பவில்லை: உக்ரைன் ஜனாதிபதி தெரிவிப்பு Reviewed by Author on March 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.