அண்மைய செய்திகள்

recent
-

கோடியக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆளில்லா மர்ம படகு - சுங்கத் துறையினர் விசாரணை.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீன்பிடி துறை முகத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் காத்தான் ஓடை என்ற கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த கண்ணாடி இழை படகு ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை கரை ஒதுங்கியுள்ளது. -மீனவர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக கோடியக்கரை சுங்கத்துறை அதிகாரி கண்காணிப்பாளர் ஸ்டெல்லா மேரி உத்தரவின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று படகை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

 குறித்த படகில் (OFRP-A-0851 KCH )என்ற இலக்கம் காணப்படுகின்றது. குறித்த படகு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த படகா? அல்லது கடத்தல் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் படகா ? இப் படகில் யாரும் வந்தனரா ? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கியூ பிராஞ்ச் போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





கோடியக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆளில்லா மர்ம படகு - சுங்கத் துறையினர் விசாரணை. Reviewed by Author on March 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.