யாழ் தீவகப் பகுதி மக்களுக்கு இடர் கால உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.
தீவு பகுதியில் உள்ள பிரதேச செயலாளர் ,கிராம சேவையாளர்கள், சமூக பணியாளர்களுடன் இணைந்து அல்லைப்பிட்டி ,மண்டைதீவு ,புங்குடுதீவு, வேலணை ,சரவணை, நயினாதீவு, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு போன்ற பகுதிகளுக்கு அங்குள்ள கிராம சேவையாளர்களால் தெரிவு செய்யப்பட்ட 300 குடும்பங்களுக்கு 3350 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது நாட்டில் தற்போது நிலவி வருகின்ற உணவு தட்டுப்பாடு, உணவுப் பொருட்களுக்கான விலை ஏற்றம் காரணமாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மற்றும் பெண் தலைமைத்துவங்களை கொண்ட குடும்பங்கள் பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனை கருத்தில் கொண்டு மன்னார் ,வவுனியா ,முல்லைத்தீவு ,போன்ற மாவட்டங்களுக்கு நிவாரண பணிகள் நடைபெற்று வரும் நேரத்தில் தீவக மக்களின் நலனை கருத்தில் கொண்டு நிவாரண பணிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்களும் குறித்த பகுதிகளில் கிராம சேவையாளர் களும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.
யாழ் தீவகப் பகுதி மக்களுக்கு இடர் கால உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.
Reviewed by Author
on
April 24, 2022
Rating:
Reviewed by Author
on
April 24, 2022
Rating:











No comments:
Post a Comment