முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறப்புற இடம்பெறும் -பொதுக்கட்டமைப்பு
ஒவ்வொரு வருடங்களிலும் இடம்பெறுகின்ற நினைவேந்தலை போன்று இம்முறையும் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு வடகிழக்கு நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அதற்கான ஆயத்த பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் எதிர்வரும் மே 18 ஆம் திகதி தமிழின அழிப்பின் உடைய 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் இடம்பெறும் என அருட்தந்தை தெரிவித்திருக்கின்றார்
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்துக்கு அருகில் இராணுவ காவலரண்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு புலனாய்வாளர்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளும் முடக்கி விடப்பட்டுள்ளது இதேவேளை பொலிசாரும் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுப்பதற்கான ஏற்ப்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறப்புற இடம்பெறும் -பொதுக்கட்டமைப்பு
Reviewed by Author
on
May 09, 2022
Rating:
Reviewed by Author
on
May 09, 2022
Rating:


No comments:
Post a Comment