அண்மைய செய்திகள்

recent
-

நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு

இனவிடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி என்ற தொனிப்பொருளில் பொத்துவிலிலும் பொலிகண்டியிலும் ஆரம்பித்த நடை பவணிகள் இன்று மாங்குளத்தில் ஒன்றிணைந்து பரந்தன் ஊடாக வள்ளிபுனத்தை வந்தடைந்து கடந்த 2006 ஆம் ஆண்டு வள்ளிபுனம் பகுதியில் விமானக் குண்டுவீச்சில் பலியாகிய மாணவர்களுக்கான அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதியை வந்து பேரணி நிறைவடைந்துள்ளது இவ்வாறு நிறைவடைந்த குறித்த நடைபவனி ஆனது நாளை காலை 8 மணிக்கு புதுக்குடியிருப்பில் இருந்து ஆரம்பமாகி நாளை பத்து முப்பதுக்கு முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாக குறித்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்

 அத்தோடு நாளைய நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தருகின்றவர்கள் காலை 8 மணிக்கு புதுக்குடியிருப்பு சந்தியிலே வருகைதந்து அந்தப் பேரணியில் இணைந்து கொள்ளுமாறு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரான லியோ அடிகளார் நாளை நினைவேந்தல் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்து உள்ளதாகவும் அனைத்து உறவுகளையும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார் --

சண்முகம் தவசீலன்


நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு Reviewed by Author on May 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.