அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மிகச் சிறப்பாக நடைபெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலக அலுவலர்கள் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 'ஆடிப்பிறப்பில் தமிழர் நாம் கூடிக் கொண்டாடிக் குதூகலிப்போம்' எனும் தொனிப் பொருளில் 2022 ம் வருடத்திற்கான ஆடிப்பிறப்பு நிகழ்வு மன்னார் மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் க. மகேஸ்வரன் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று(20) காலை நடைபெற்றது.

 மன்னார் மாவட்ட சிரேஸ்ட கலாச்சார உத்தியோகத்தர் .நித்தியானந்தன் அவர்களின் நெறியாள்கையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார் இந்த நிகழ்வில் நவாலியூர் சோமசுந்தரம் பிள்ளை அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்னும் பிரதம விருந்தினர் உரை யை மன்னார் மாவட்டச் செயலாளர் நிகழ்த்தினார்.

 அதனைத் தொடர்ந்து ஆடி மாதத்தின் சிறப்பு பற்றி மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் சதீஷ் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலக அலுவலர்களுக்கான வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை களுக்குரிய மரக்கறி கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மன்னார் உதவி மாவட்டச் செயலாளர்கள் மன்னார் அனர்த்த முகாமைத்துவ அதிகாரி கனகரெத்தினம் திலீபன் மன்னார் சமுர்த்தி பணிப்பாளர் திரு.அலியார்,கலாச்சார உத்தியோகத்தர்கள் மாவட்டச் செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் முசலி பிரதேச செயலாளர் திரு.சிவராஜ், மாவட்ட செயலகத்தின் பணியாளர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.











மன்னாரில் மிகச் சிறப்பாக நடைபெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் Reviewed by Author on July 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.