அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையை சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 7 இலங்கை தமிழர்கள் பேர் இன்று (19) காலை தனுஷ்கோடி வந்தடைந்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் இருந்து 116 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.

 இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் நாவற்குழி சேர்ந்த மேரி அகஸ்டா (44) அவரது இரண்டு குழந்தைகள் மேலும் திருகோணமலை மாவட்டம் அனந்தபுரியை சேர்ந்த மகேசன் (39), அவரது மனைவி தேவி (38), அவர்களது இரண்டு குழந்தை என மொத்தம் 7 பேர் இலங்கையிலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள ஐந்தாம் மணல் தீடை பகுதியில் இன்று (19) காலை வந்திறங்கினர். தகவலறிந்து மண்டபம் கடலோர காவல் படையினர் 5 ஆவது மணல் தீடை இலிருந்து இலங்கைத் தமிழர்களை ஹோவர் கிராஃப்ட் படகு மூலம் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரைக்கு கொண்டு வந்து ராமேஸ்வரம் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பிறகு 7 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர். மேலும் தமிழகத்திற்கு வந்த இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையை சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்! Reviewed by Author on July 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.