அண்மைய செய்திகள்

recent
-

எரிவாயு சிலிண்டரின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு!

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 முதல் 200 ரூபா வரை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு விலையை கணக்கிடும் சூத்திரத்தின் பிரகாரம் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 கடந்த ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை 246 ரூபாவினால் குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. இதன்படி, தற்போது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் 4,664 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. எரிவாயு விலை குறைந்துள்ள போதிலும், உணவகங்களில் உணவு விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


எரிவாயு சிலிண்டரின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு! Reviewed by Author on September 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.