அண்மைய செய்திகள்

recent
-

கனடாவில் தொடர் தாக்குதல்கள் : 10 பேர் பலி

கனடாவின் சஸ்கட்சாவான் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட ஆயுத தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்தனர். அத்துடன், 15 இற்கும் அதிமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் கனடாவின், ரஜினா நகரில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் சீர் நேஷன், வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆயுத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 

கனேடியன் விளையாட்டு போட்டிகள் ரஜினா நகரில் நடைபெற்று வரும் நிலையில், இந்த தாக்குதல் நடத்தியவர் மற்றும் தாக்குதலுக்கான பின்னணி குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த தாக்குதகளை தொடர்ந்து கனடா முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்ட்டுள்ளது. நடத்தப்பட்ட தாக்குதல்களை பயங்கரமான மற்றும் கவலையளிக்கும் செயலாகும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.


கனடாவில் தொடர் தாக்குதல்கள் : 10 பேர் பலி Reviewed by Author on September 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.