அரச சேவையாளர்களின் கோரிக்கை
குறித்த கடிதத்தினை ஏற்றுக்கொண்டுள்ள நிதி அமைச்சு விரைவில் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்து தருவதாக சம்மேளனங்களின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களிம் உறுதியளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டின் பின்னர் அரச சேவையாளர்களுக்கு வேதன அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமையினால் பணிக்கு சென்று திரும்புவதற்கேனும் வேதனம் பற்றாக்குறையாக காணப்படுவதாக சம்மேளனத்தின் உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ளார்.
நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதோடு, அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளமையினால் அரச சேவையாளர்களுக்கு கிடைக்கின்ற வேதனம் குறைந்த பட்ச தேவைகளையேனும் பூர்த்தி செய்வதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
அரச சேவையாளர்களின் கோரிக்கை
Reviewed by Author
on
October 10, 2022
Rating:

No comments:
Post a Comment