அண்மைய செய்திகள்

recent
-

மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் கணிசமான மழைவீழ்ச்சி

களனி மற்றும் மகாவலிக் கங்கையிலுள்ள மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களனி மற்றும் மகாவலி பகுதிகளில் சுமார் 50 மில்லிமீற்றர் தொடக்கம் 60 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியிலாளர் டி.அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார். “இருப்பினும், மேல்நிலைப் பகுதிகளில் சிறிய மழை மட்டுமே பெய்துள்ளது, எனவே பாசன நீர்த்தேக்கங்களில் கணிசமான அளவு நீர்மட்டம் அதிகரிக்கவில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார். இதனால், இன்னும் 36 சதவீத நீர் இருப்பு உள்ளதால், இந்த நீர்த்தேக்கங்களின் கசிவு கதவுகளை திறக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் கணிசமான மழைவீழ்ச்சி Reviewed by Author on October 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.