அண்மைய செய்திகள்

recent
-

இங்கிரிய விபத்தில் இளைஞர் பலி; இருவர் படுகாயம்

விருந்து ஒன்றுக்குச் சென்றுவிட்டு வந்து கொண்டிருந்த மூன்று இளைஞர்களுடன் வந்த கார் ஒன்று இங்கிரிய நம்பபான பிரதேசத்திலுள்ள வடிகான் குழாயில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் நாச்சிமலை, இங்கிரிய, மஹா இங்கிரிய பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சுரவீர ஆராச்சிகே முதுமால கலநஜித் என்ற இளைஞர் ஆவார்.

 மூன்று இளைஞர்களை ஏற்றிய கார் இங்கிரியவில் இருந்து இரத்தினபுரி நோக்கி அதிவேகமாக பயணித்த போது, ​​நம்பப்பன பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து வடிகான் குழாயில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் காரின் முன் இடது ஆசனத்தில் அமர்ந்திருந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சாரதியாக இருந்த இளைஞன் ஹொரணை ஆதார வைத்தியசாலையிலும், பின்னால் பயணித்த இளைஞன் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கிரிய விபத்தில் இளைஞர் பலி; இருவர் படுகாயம் Reviewed by Author on October 07, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.