இங்கிரிய விபத்தில் இளைஞர் பலி; இருவர் படுகாயம்
மூன்று இளைஞர்களை ஏற்றிய கார் இங்கிரியவில் இருந்து இரத்தினபுரி நோக்கி அதிவேகமாக பயணித்த போது, நம்பப்பன பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து வடிகான் குழாயில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் காரின் முன் இடது ஆசனத்தில் அமர்ந்திருந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சாரதியாக இருந்த இளைஞன் ஹொரணை ஆதார வைத்தியசாலையிலும், பின்னால் பயணித்த இளைஞன் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கிரிய விபத்தில் இளைஞர் பலி; இருவர் படுகாயம்
Reviewed by Author
on
October 07, 2022
Rating:

No comments:
Post a Comment