அண்மைய செய்திகள்

recent
-

நவராத்திரி விரதத்தில் ஏழாம் நாள் இன்று

நவராத்திரி விரதத்தில் ஏழாம் நாள் வழிபாடு மிகவும் முக்கியம் வாய்ந்தது. நவராத்தியின் ஒன்பது நாட்களும், சக்தியை, துர்கா, பத்ரக்காளி, ஜகதாம்பாள், அன்னபூரணி, சர்வமங்களா, பைரவி, ஜாந்தி, லலிதா, பவானி மற்றும் மூகாம்பிகா என அலங்கரித்து வழிபடுறோம். சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது நவராத்திரி விரதம். 

அந்தவகையில், நவராத்திரியின் ஆறாவது நாளில் நாம் அம்பிகையை வழிபட்டு இருப்போம். ஏழாம் நாளில் ஏழு வயதுள்ள பெண் குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை 'காளிகா' தேவியாக வழிபட வேண்டும். பேரி வாசிக்கத் தெரிந்தவர்கள் நீலாம்பரி ராகம் இசைப்பது மிகவும் சிறந்தது. நவராத்திரியின் ஏழாவது நாளில் தேங்காய் சாதமும், ஏதேனும் ஒரு நவதானியத்தைக் கொண்டு சுண்டலும் செய்து அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து, அனைவருக்கும் பிரசாதமாகக் கொடுக்க வேண்டும். இன்று அம்பிகையை தும்பை பூவால் அர்ச்சனை செய்வது மேலும் சிறப்பான பலனை அருளும்.

நவராத்திரி விரதத்தில் ஏழாம் நாள் இன்று Reviewed by Author on October 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.