எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் இந்திய கடற்படையினரால் கைது.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மார்க்ஸ் ஜூட் மாஸ்டர் , ஆண்டனி ஹேமா நிஷாந்தன் , இம்மானுவேல் நிக்சன் ,துருவந்தா ஸ்ரீலால், சுதீஷ் சியான் உள்ளிட்ட இலங்கை மீனவர்கள் 5 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் நடுக்கடலில் இலங்கை கடல் எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த நிலையில் கடற்படையினரிடம் சிக்கினர்.இவர்களிடம் இருந்து ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து விசாரணைக்காக தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரைக்கு அழைத்துவரப்பட்டு அவர்களிடம் கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் இந்திய கடற்படையினரால் கைது.
Reviewed by Author
on
October 16, 2022
Rating:

No comments:
Post a Comment