யாழ்.இளைஞர்களை கனடா அனுப்புவதாக கூறி பெண்ணொருவர் ஒரு கோடி ரூபாய் மோசடி!
இந்நிலையில் அவரிடம் நாம் பணத்தினை மீள கேட்ட போது, கொழும்பில் உள்ள முகவர் ஒருவருக்கு தான் பணத்தினை செலுத்தி விட்டதாகவும், தற்போது அவரது தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களிடம் தெரிவிக்கின்றார் எனவும் அவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
தாங்கள் கொடுத்த பணத்தினை அவரிடமிருந்து மீள பெற்று தர வேண்டும் என கோரியே பொலிஸ் நிலையத்தில் இளைஞர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களில் ஒருவர் 55 இலட்ச ரூபாயும், மற்றையவர் 44 இலட்சத்து 35ஆயிரம் ரூபாயும் அப்பெண்ணிடம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.இளைஞர்களை கனடா அனுப்புவதாக கூறி பெண்ணொருவர் ஒரு கோடி ரூபாய் மோசடி!
Reviewed by Author
on
November 24, 2022
Rating:

No comments:
Post a Comment