அண்மைய செய்திகள்

recent
-

தினேஷ் குணவர்தனவினால் எல்லை நிர்ணயத்திற்கான தேசிய எல்லை நிர்ணய குழு நியமனம்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயத்திற்காக தேசிய எல்லை நிர்ணய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் நான்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 இந்த குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த குழுவின் உறுப்பினர்களாக ஜயலத் திஸாநாயக்க, டபிள்யூ.எம்.எம்.ஆர்.அதிகாரி, கே. தவலிங்கம் மற்றும் ஐ.ஏ.ஹமீட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.


தினேஷ் குணவர்தனவினால் எல்லை நிர்ணயத்திற்கான தேசிய எல்லை நிர்ணய குழு நியமனம் Reviewed by Author on November 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.