சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி பலி!
அங்கு மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் அதிகாரி ஒருவர் நேற்று (22) உயிரிழந்துள்ளார்.
பனாமுர பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிளான இவர் பன்கன்விலயாய கட்டுவன பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடையவராவார்.
சம்பவத்தில் காயமடைந்த மற்றைய அதிகாரி எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி பலி!
Reviewed by Author
on
November 23, 2022
Rating:

No comments:
Post a Comment