அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் பிரதேச கலாசார விழா மற்றும் மன்னல் நூல் வெளியீட்டு விழா

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வடமாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அணுசரனையில் மன்னார் பிரதேச செயலகம் மற்றும் மன்னார் கலாச்சார பேரவை இணைந்து நடத்திய 2022 ஆம் ஆண்டுக்கான மன்னார் பிரதேச கலாச்சார விழா மற்றும் மன்னல் நூல் வெளியீட்டு விழா நிகழ்வானது மன்னார் நகர் பிரதேச செயலாளாரும் மன்னார் பிரதேச கலாச்சார பேரவையின் தலைவருமான எம்..பிரதீப் தலைமையில் மன்னார் நகரசபை மண்டபத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை (21) இடம்பெற்றது குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்திலுள்ள கலைஞர்களுடன் சந்திப்பு, கலை நிகழ்வு,கலைஞர்கள் கௌரவிப்பு மற்றும் வருட வருடம் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரனையுடன் வெளியிடப்படும் மன்னல் நூல் வைபவரீதியாக வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

 குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமேல் ,சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி அன்னை இல்ல பணிப்பாளர் அருட்தந்தை செபமாலை அன்பு ராசா அடிகளார் ,மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பரந்தாமன் மற்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் அவர்களும் கலந்து கொண்டனர். அவர்களுடன் பிரதேச ரீதியாக பதிவு செய்யப்பட்ட காலா மன்ற பிரதிநிதிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வின் இறுதியில் கலாச்சார பேரவையினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் மன்னார் பிரதேசத்தில் கலை வளர்ச்சிக்கு பங்காற்றிய 5 கலைஞர்கள் விருந்தினர்களால் கெளரவிக்கப்பட்டது டன் அவர்களுக்கு நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
















சிறப்பாக இடம் பெற்ற மன்னார் பிரதேச கலாசார விழா மற்றும் மன்னல் நூல் வெளியீட்டு விழா Reviewed by Author on December 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.