அரசாங்க வேலைக்காக 6 மாத குழந்தையை கொலை செய்த பெற்றோர்!
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கணவனும் , மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரிய்வருகையில்,
மேற்படி பெண் குழந்தை 36 வயதான ஜவஹர்லால் மேக்வால், கீதா தேவி ஆகியோரின் 3 ஆவது பிள்ளையாகும்.
ராஜஸ்தான் மாநில அரசாங்க கொள்கையின்படி, அரச ஊழியர்கள் 2 பிள்ளைகளை மாத்திரமே பெற முடியும். 3 ஆவது பிள்ளை பிறந்தபின் அரச பணியிலிருந்து கட்டாயமாக ஓய்வு பெற வேண்டும்.
இந்நிலையில், தனக்கு ஏற்கெனவே இரு பிள்ளைகள் உள்ள நிலையில், 3 ஆவது குழந்தை பிறந்ததால் அரசாங்கத் தொழிலை இழக்க நேரிடும் என ஜவஹர்லால் மேக்வால் அச்சமடைந்தாராம். இதனால், அவர் மேற்படி பெண் குழந்தையை கால்வாயில் வீசி கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
அரசாங்க வேலைக்காக 6 மாத குழந்தையை கொலை செய்த பெற்றோர்!
Reviewed by Author
on
January 24, 2023
Rating:

No comments:
Post a Comment