யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் 4 பேருக்கு வகுப்புத்தடை
அங்கு கலை நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மூன்றாம் வருட மாணவர்களுக்கும், இரண்டாம் வருட மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றி, கடந்த 23ஆம் திகதி மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தின் போது காயங்களுக்கு உள்ளான இரண்டாம் வருட மாணவன் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில், பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் குறித்த நான்கு மாணவர்களுக்கும் அதில் தொடர்புள்ளமை தெரிய வந்துள்ளது.
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் 4 பேருக்கு வகுப்புத்தடை
Reviewed by Author
on
February 26, 2023
Rating:

No comments:
Post a Comment