அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளராக மார்க்-ஆண்ட்ரே

 இலங்கையில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளராக கனடாவைச் சேர்ந்த மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்சேவை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ், நியமித்துள்ளார்.

24 ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றியுள்ள மார்க்-ஆண்ட்ரே கடந்த 8 ஆம் திகதி அமுலாகும் வகையில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கையில் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளராக அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர், லிபியாவில் ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றியிருந்தார்.

2016 மற்றும் 2021 க்கு இடையில், அரசியல் மற்றும் அமைதியை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்களத்தில் சமாதானத்தை கட்டியெழுப்பும் ஆதரவு அலுவலகத்திலும் அவர் பணியாற்றி இருந்தார்.


இலங்கையில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளராக மார்க்-ஆண்ட்ரே Reviewed by Author on July 11, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.