அண்மைய செய்திகள்

recent
-

நாடளாவிய ரீதியில் மின் தடை- கஞ்சன விஜேசேகர

 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பதினான்காயிரத்திற்கும் அதிகமான மின் தடைகள் பதிவாகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு ஒத்திவைப்பு தொடர்பான விவாதம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்ற நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த நிலமையை வழமைக்கு கொண்டுவர மின்சாரசபை ஏற்கனவே செயற்பட்டு வருவதாகவும், நுவரெலியா, கண்டி மற்றும் நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளிலும், அதிக மழைவீழ்ச்சி உள்ள பிரதேசங்களிலும் இந்த நிலைமை காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


நாடளாவிய ரீதியில் மின் தடை- கஞ்சன விஜேசேகர Reviewed by Author on July 06, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.