மன்னாரில் இடம் பெற்ற சமூக அபிவிருத்திக்கான பல் கலாச்சார இஞையோரின் ஒன்றிணைவு நிகழ்வு
கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் சமூக அபிவிருத்திக்கான பல் கலாச்சார இஞையோரின் ஒன்றிணைவு எனும் தொனிப்பொருளில் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (2) மாந்தை மேற்கு பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்றது .
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ,சிறப்பு விருந்தினர்களாக மாந்தை மேற்கு உதவி பிரதேச செயலாளர் ,அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ,நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது இளைஞர்,யுவதிகளின் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்ற தோடு,வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னாரில் இடம் பெற்ற சமூக அபிவிருத்திக்கான பல் கலாச்சார இஞையோரின் ஒன்றிணைவு நிகழ்வு
Reviewed by Author
on
May 02, 2024
Rating:

No comments:
Post a Comment