அண்மைய செய்திகள்

recent
-

கட்டாரின் முன்னாள் மன்னர் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்

 கட்டாரின் முன்னாள் மன்னரான ஷேக் ஹமட் பின் கலீபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது ஆழ்ந்த இரங்கலை வௌியிட்டுள்ளது. 


ஜனாதிபதி தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

கட்டாரின் முன்னாள் மன்னராக இருந்த ஷேக் ஹமட் பின் கலீபா அல் தானி தமது 74 வது வயதில் காலமானார். 

இந்நிலையில் ஜனாதிபதி வௌியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கட்டாரின் தந்தை ஷேக் ஹமாட் பின் கலீபா அல் தானியின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த துயரமடைகிறேன். 

அவரது தொலைநோக்குத் தலைமையும், கட்டார் தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவையும் எப்போதும் நினைவுகூரப்படும். 

இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக, அரச குடும்பத்தினருக்கும் மற்றும் கட்டார் மக்களுக்கும் மனமார்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.





கட்டாரின் முன்னாள் மன்னர் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல் Reviewed by Vijithan on July 12, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.