பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள நீரில் விளையாடுவது மற்றும் நீந்துவதினை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
வெள்ள நீரில் ஆபத்தான பக்றீரியாக்கள் பரவக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
எலிக்காய்ச்சல் நோய் பரவல்
வெள்ள நீரில் நனைந்த உணவு வகைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் அழித்துவிடுமாறும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, நாட்டில் எலிக்காய்ச்சல் நோய் பரவி வருவதாகவும் இது குறித்து மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Reviewed by Author
on
June 04, 2024
Rating:

No comments:
Post a Comment