அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணத்தில் குழியில் இருந்து சிறுமிகளின் சடலங்கள் மீட்பு

 யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற குழியில் விழுந்து உயிரிழந்த இரண்டு சிறுமிகளின் சடலங்கள் நேற்று (01) இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

11 வயது சிறுமி மற்றும் 5 வயது சிறுமியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமிகள் இருவரும் நேற்று (01) பிற்பகல் துவிச்சக்கர வண்டியில் அருகிலுள்ள கடையொன்றுக்கு சென்றிருந்த நிலையில், வீடு திரும்பாதமை தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் போது, குழியில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சடலங்கள் ஊர்காவற்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் இன்று (02) இடம்பெறவுள்ளன.

உயிரிழந்த இருவரும் சகோதரிகள் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



யாழ்ப்பாணத்தில் குழியில் இருந்து சிறுமிகளின் சடலங்கள் மீட்பு Reviewed by Author on June 02, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.