அண்மைய செய்திகள்

recent
-

கிறிஸ்துமஸ் நாளில் வவுனியாவில் நடந்த விபத்து பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

 வவுனியா - கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு (25) இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞர் மற்றொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.


கோவில்குளம் பகுதியில் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.



விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற இளைஞர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.



சம்பவத்தில் யாழ். அராலி பகுதியை சேர்ந்த ப.சஞ்சயன் என்ற 22 வயதான இளைஞரே மரணமடைந்தார்.


மற்றையவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டும் நிலையில் விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




கிறிஸ்துமஸ் நாளில் வவுனியாவில் நடந்த விபத்து பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் Reviewed by Author on December 26, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.