மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயரை சந்தித்த அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெர்னாண்டோ
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளாரை அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும்,சர்வதேச இசை கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைக்கான தூதுவருமான அதி வணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெர்னாண்டோ இன்றைய தினம் (17) செவ்வாய்க்கிழமை மாலை நேரடியாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
-குறித்த சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (17) மாலை 5 மணியளவில் மன்னார் மடு திருத்தலத்தில் இடம் பெற்றுள்ளது.
அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் மன்னார் மடு திருத்தலத்தின் பரிபாலகராக பணியாற்றி வரும் நிலையில் மடு திருத்தலத்திற்கு சென்ற அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெர்னான்டோ வாழ்த்துக்களை தெரிவித்ததோடு,கலந்துரையாடலையும் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
December 17, 2024
Rating:

.jpeg)
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment