மன்னார் குடும்பஸ்தரை காணவில்லை-மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.
மன்னார் பனங்கட்டு கொட்டு மேற்கு பகுதியை சேர்ந்த முருகேசு சசிக்குமார் என்ற 51 வயது குடும்பஸ்தர் ஒருவரை கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் கடந்த 23 ஆம் திகதி வவுனியா சென்ற நிலையில் இதுவரை வீடு திரும்பாத நிலையில் அவர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த நபர் தொடர்பாக தகவல் எதுவும் தெரிந்தவர்கள் 0743022280,0758320499 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
மன்னார் குடும்பஸ்தரை காணவில்லை-மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.
Reviewed by Vijithan
on
March 27, 2025
Rating:

No comments:
Post a Comment