அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடுவில் மற்றுமொரு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

மன்னார் மடுவில் மற்றுமொரு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!


முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படும் இறுதி யுத்தத்தின் போது மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் கஞ்சி வழங்கும் செயற்பாடு வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகின்றது.


அந்த வகையில் மன்னார் மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கத்தின் அனுசரணையுடன், பொதுமக்களின் ஏற்பாட்டில், மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியமுறிப்பு பகுதியிலும் இன்றையதினம் (17) காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.


இந்த நிகழ்வில் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள், என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


தவிர நேற்று முன்தினம் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் கிழக்கு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















மன்னார் மடுவில் மற்றுமொரு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு! Reviewed by Vijithan on May 17, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.