அண்மைய செய்திகள்

recent
-

மக்கள் பாரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்: சி.வி

'வட மாகாண மக்கள் தம்மிடம் பெரும் பொறுப்பை கையளித்துள்ளதாக வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 'இந்த அமோக வெற்றி தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகவும், அதேவேளை மக்கள் தம்வசம் பாரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள்' என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 இந்த மாகாண சபைத் தேர்தல் வெற்றி குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரான இரா. சம்பந்தன், 'மக்கள் சமாதானத்துக்காக வாக்களித்துள்ளார்கள்.

அவர்கள் தமது எண்ணங்களை வாக்குகளில் பிரதிபலித்துள்ளார்கள். அவர்களது தீர்ப்புக்கு ஏற்ப தாம் நடப்போம்' என்றும் கூறியுள்ளார்.


மக்கள் பாரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்: சி.வி Reviewed by Admin on September 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.