அண்மைய செய்திகள்

recent
-

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூல மாணவன் 19ஆவது இடத்தில் :70 வீதமானோர் சித்தி

2013 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் சித்­தி­யெய்­திய முதற்தர வரி­சையில் தமிழ்­மொழி மூல­மான ஒரே­யொரு மாணவர் மாத்­திரம் 19ஆவது இடத்தைப் பிடித்­துள்ளார். ஏனைய சித்­தி­யெய்­திய18 மாண­வர்­களும் சிங்­கள மொழி மூலம் பரீட்­சைகள் எழு­திய மாண­வர்­க­ளாகும் என இலங்கை பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­தது. 

 அத்­தோடு இம்­முறை பரீட்­சையில் 322,455 மாண­வர்கள் தோற்­றி­ய­தோடு இதில் 32,617 மாண­வர்கள் சித்­தி­யெய்­து­வ­தற்­கான வெட்டுப் புள்­ளி­க­ளுக்கு மேல­திக புள்­ளி­களை பெற்­றுள்­ள­தாகவும் பரீட்­சைகள் திணைக்­களம் தெரி­வித்­தது. இதேவேளை 2 இலட்சத்து 23 ஆயிரத்து 908 பேர் 70 புள்ளிகளுக்கு மேல் பெற் றுள்ளதாக பரீட்சைத்திணைக்களம் அறி வித்துள்ளது. இந்தப்பரீட்சையில் 69.44 வீத மானோர் சித்தியடைந்துள்ளனர் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்ன தெரி வித்துள்ளார். 

 நடந்து முடிந்த 5 ஆம் வகுப்பு புல­மைப்­ப­ரிசில் பெறு­பே­றுகள் தொடர்­பாக விளக்­க­ம­ளிக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று புதன்­கி­ழமை கல்­வி­ய­மைச்சர் பந்­துல குண­வர்­தன தலை­மையில் பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள இசு­று­பா­யவில் இடம்­பெற்ற போதே பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் டபிள்யூ.ஏ.டி. புஷ்­ப­கு­மார வெளி­யிட்ட பெறு­பே­றுகள் அறிக்­கையில் இவ்­வி­ட­யங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. பரீட்­சை­களின் பெறு­பே­று­க­ளுக்­க­மைய முத­லா­மி­டத்தில் 198 புள்­ளி­களை பெற்ற சந்­தரு தக்­சர பல­ஹேவ காலி மஹிந்த வித்­தி­யா­ல­யத்தைச் சேர்ந்த மாணவன் முத­லா­மி­டத்தை பெற்­றுள்­ள­தோடு ஏனைய 17 இடங்­க­ளிலும் சிங்­கள மொழி மூல­மான மாண­வர்­களே முதல்­தர வரி­சைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். 

 பத்­தொன்­ப­தா­வது இடத்தில் பர­மா­னந்தன் தனுராஜ் யாழ்ப்­பாணம், ஏழாலை சைவ சன்­மார்க்க வித்­தி­யா­லயம் சுன்­னாகம் மாணவன் தமிழ் மொழி மூலம் சித்­தி­பெற்­றுள்ளார். கடந்த ஆண்டு 2012 இல் இடம்­பெற்ற 5 ஆம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்­சை­களில் முதல் தர வரி­சையில் சித்­தி­யெய்­திய தமிழ்­மொழி மூல­மான மாண­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­மாகும். 

 ஆனால் இந்த ஆண்டு 2013 இல் தமிழ்­மொழி மூலம் ஒரே­யொரு மாணவன் மாத்­திரம் 194 க்கு அண்­ண­ள­வாக புள்­ளி­களை பெற்று 19 ஆவது இடத்தை பிடித்­துள்ளார். இதன் மூலம் 2013 ஆம் ஆண்டு 5 ஆம் வகுப்பு புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் தமிழ்­மொழி மூல­மான மாண­வர்கள் பாரிய பின்­ன­டைவை கண்­டுள்­ளனர். பரீட்­சைகள் திணைக்­களம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் இவ்­வாறு தக­வல்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.
5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூல மாணவன் 19ஆவது இடத்தில் :70 வீதமானோர் சித்தி Reviewed by Admin on October 03, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.