நானாட்டான் பிரதேச செயலகம் தாக்கப்பட்டதை கண்டித்து மன்னார் மாவட்ட அனைத்து பிரதேச செயலக ஊழியர்கள் அமைதி ஆர்ப்பாட்டம் -படங்கள்
நானாட்டான் பிரதேச செயலகம் பொன்தீவுகண்டல் மக்களால் நேற்று முற்றுகையிடப்படடு அலுவலக பணிகள் முடக்கப்பட்டு சேதமாக்கப்பட்ட நிலையினை கண்டித்து இன்று மன்னார் பிரதேச செயலகத்தில் ஒரு மணித்தியால பணிபகிஸ்ககிப்பில் பிரதேச செயலக ஊளியர்கள் ஈடுபட்டனர்.
இதன் போது குறித்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மன்னார் பிரதேச செயலக ஊளியர்கள் சுலோகங்களை ஏந்தியவாறு அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த அமைதி ஆர்ப்பட்டத்தில் மன்னார் பிரதேச செயலாளர் தயானந்தா,மன்னார் பிரதேச செயலக கிராம உத்தியோகஸ்தகர்களின் நிர்வாக உத்தியோகஸ்தர் ராதா பெனான்டே உள்ளிட்ட பிரதேச செயலக ஊளியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை மன்னார் மாவட்டத்தின் ஜந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் குறித்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இன்று நடைபெற்றது.
இதன்படி நானாட்டான் பிரதேச செயலகத்தில் காலைமுதல் மாலைவரை குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதேபோன்று மாவட்டத்தின் ஜந்து பிரதேச செயலாளர்பிரிவிலும் குறித்த ஆர்ப்பாட்டம் 10 மணிமுதல் 11மணிவரையான ஒரு மணித்தியாலம் நடைபெற்றுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலநது கொண்ட அரச ஊளியர்கள் நானாட்டான் பிரதேச செயலகம் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டித்ததோடு இவ்வாறான சம்பவம் மேலும் நடைபெற கூடாது என தெரிவித்துள்ளனர்.
நானாட்டான் பிரதேச செயலகம் தாக்கப்பட்டதை கண்டித்து மன்னார் மாவட்ட அனைத்து பிரதேச செயலக ஊழியர்கள் அமைதி ஆர்ப்பாட்டம் -படங்கள்
Reviewed by Author
on
December 10, 2013
Rating:

No comments:
Post a Comment